30 ஆண்டுக்கு தொகுதி மறுவரையறை கூடாது – அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

பதிவு: வியாழக்கிழமை, குரோதி வருடம், மாசி 22, மார்ச் 06, 2025, 04:`00 AM சென்னை, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு அடுத்த 30 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்படாது என பிரதமர் மோடி உறுதியளிக்க வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். தொகுதி மறுசீரமைப்பு என்ற சதியை அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (மார்ச்-05 ந் தேதி) தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு…

Read More

2026ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது – தேனி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பேச்சு

பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 04, 2025, 01:`55 AM தேனி, 2026-ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்று தேனி பொதுக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்றும் அவர் கூறினார். அண்ணா தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, தேனி அருகே மதுராபுரியில் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் அண்ணா…

Read More

கவுரவம் பார்க்க வேண்டாம் – அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் மீண்டும் அழைப்பு

பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 04, 2025, 01:`30 AM நாகை, தமிழகத்தின் பிரச்சினை, நம் உரிமைகள் பறிபோகும் பிரச்சினை – கவுரவம் பார்க்க வேண்டாம் – அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் மீண்டும் அழைப்பு – நாகப்பட்டினத்தில் முதல்வர் ஸ்டாலின், ரூ.82.9 கோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ‘‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதில் கவுரவம் பார்க்காதீர்கள். தமிழகத்தின் பிரச்சனை, நம் உரிமைகள் பறிபோகும் பிரச்சனையை அரசியலாகப் பார்க்காமல் வாருங்கள்’’…

Read More

‘கைது, மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்’ – சீமான் பேட்டி

பதிவு: சனிக்கிழமை, மார்ச் 01, 2025, 06:`00 AM சென்னை, கைது, மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். விசாரணை நிறைவடைந்த பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “விசாரணையில் புதிய கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கத்தை அளித்துள்ளேன். தேவைப்பட்டால் மறுபடியும் விசாரணைக்கு அழைப்போம் என்று…

Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா – 1967, 1977 தேர்தல் போல… 2026 தேர்தலில் மாற்றம் கொண்டு வருவோம் – விஜய் உறுதி

பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025, 03:`35 PM சென்னை, த.வெ.க. 2–ம் ஆண்டு துவக்க விழா – பாசிசமும், பாயாசமும் ஹேஷ்டேக் போட்டு விளையாடி கொண்டிருக்கின்றன – பணத்தாசை கொண்ட பண்ணையார்களை அரசியலில் இருந்து அகற்றுவோம் – 1967, 1977 தேர்தல் போல 2026 தேர்தலில் மாற்றம் கொண்டு வருவோம்: விஜய் உறுதி – மும்மொழி கொள்கையை எதிர்ப்போம் எப்போது பார்த்தாலும், பணம், பணம் என்ற மனநிலை கொண்ட பண்ணையார்களை அரசியலை விட்டே ஜனநாயக முறையில்…

Read More

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் 4 ஆண்டுகளாக ஏமாற்றி விட்டார் முதல்வர் – அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்

பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025, 03:`05 AM சென்னை, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் 4 ஆண்டுகளாக ஏமாற்றி விட்டார் முதல்வர் – அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: வகுப்பறைகளுக்கு பூட்டு – எங்களை ஏமாற்றினால் 2026 தேர்தலில் ஏமாறுவீர்கள் என எச்சரிக்கை பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், சரண்விடுப்பு,…

Read More

தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க மார்ச் 5–ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025, 03:`00 AM சென்னை, 8 நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் அபாயம் – 40 கட்சிகளுக்கு அழைப்பு – நாடாளுமன்றத்தில் தமிழக குரலை ஒடுக்க மத்திய அரசு சதி – மற்றொரு மொழிப்போருக்கு தயார் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை பிரித்தால், தமிழகத்தில் இருக்க கூடிய தொகுதிகளில் 8 தொகுதியை இழக்க கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. எனவே தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க 5ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என…

Read More

தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகம் – முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025, 05:`55 AM சென்னை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மத்திய அரசு என்று சொல்லிக்கொள்ளும், ஒன்றிய அரசின் நெருக்கடி இருந்தாலும், அந்த நெருக்கடிக்களுக்கு மத்தியிலும், அது பற்றி கவலைப்படாமல் தமிழ்நாட்டு நலன்களை மட்டுமே மனதில் வைத்துக்…

Read More

ஜெயலலிதா பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம் – சென்னையில் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மாலை

பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025, 05:`50 AM சென்னை, ஜெயலலிதா பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம் – சென்னையில் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மாலை – 77 கிலோ கேக் வெட்டினார் – ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை கழகம் விழா கோலம் பூண்டிருந்தது. வாழை மரம், மலர்களால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எழுச்சி வரவேற்பு அண்ணா தி.மு.க….

Read More

ரேகா குப்தா டெல்லியின் 4-வது பெண் முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார்

பதிவு: வியாழக்கிழமை, பிப்ரவரி 20, 2025, 06:`05 AM புதுடில்லி, பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறும் பிரமாண்ட விழாவில், ரேகா குப்தா இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்கிறார். 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை தெரிவித்தன. அதன்படி பா.ஜனதா 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி…

Read More