முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

Spread the love

பதிவு: வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024, 12:`20 AM

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவால் இன்று காலமானார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நல குறைவால் நேற்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு ஆகியவற்றால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 92.

1932-ம் ஆண்டு செப்டம்பர் 26-ல், தற்போது பாகிஸ்தானில் உள்ள கா என்ற இடத்தில் பிறந்த அவர், 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். நாட்டின் 13-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். இதன்பின்னர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓய்வு பெற்றார்.

இந்தியாவின் பொருளாதாரம் தாராளமயம் ஆவதற்கான பணியில் முக்கிய பங்காற்றியதற்காக அவர் நினைவுகூரப்படுவார். அவருடைய பதவி காலத்தில், உலகின் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உருமாற்றியதில் பெரும் பங்கு வகித்த பெருமைக்குரியவர் ஆவார்.

பிரதமராவதற்கு முன்பு, 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் நிதி மந்திரியாகவும் இருந்துள்ளார். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *