சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக, சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தல்: பா.ஜ.க. சார்பில் ஓம் பிர்லா – இந்தியா கூட்டணியில் சுரேஷ் போட்டி

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2024, 05.20 PM புதுடெல்லி, 18வது நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பா.ஜ.க.வின் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இதன்மூலம், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்றது. இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை…

Read More

18வது மக்களவை தொடங்கியது: எம்.பி.யாக மோடி பதவியேற்றார்

பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 24, 2024, 05.20 PM புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடாளுமன்ற இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹதாப் எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கவும், சபாநாயகர், துணை சபாநாயகரை தேர்வு செய்யவும் நாடாளுமன்றத்தின் 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது. இன்றும், நாளையும் முதல் 2 நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்க உள்ளனர். எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா முன்னதாக ஜனாதிபதி…

Read More

கள்ளச்சாராய சாவுக்கு தி.மு.க. அரசே பொறுப்பு: எடப்பாடி குற்றச்சாட்டு – கள்ளக்குறிச்சி ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 24, 2024, 05.10 PM கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக கோரியும் தமிழகம் முழுவதும் இன்று அண்ணா தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விஷச் சாராய சாவு ஏற்பட்ட கள்ளக்குறிச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். கள்ளச்சாராய சாவு 59 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு தி.மு.க. அரசே பொறுப்பு. ஸ்டாலின் ராஜினாமா…

Read More

சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் – மோடி உறுதி

பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 24, 2024, 05.00 PM புதுடெல்லி, 3வது முறை ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம் என பிரதமர் மோடி உறுதியளித்தார். சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்றும் அவர் கூறினார். 18வது நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நாடாளுமன்ற ஜனநாயகத்தில், இது ஒரு புகழ்மிக்க நாள். ஆம், சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக, நமது சொந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்,…

Read More

குடிக்காதே என்று சொல்ல முடியாது; அளவோடு குடி என்று சொல்லலாம் – கமல்ஹாசன் கருத்து

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 23, 2024, 04.10 PM கள்ளக்குறிச்சி, விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், விஷ சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி…

Read More

கள்ளக்குறிச்சி விவகாரம்: அப்பாவிகள் உயிர் போனதற்கு யார் பொறுப்பு? ஐகோர்ட்டு சரமாரி கேள்வி

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 21, 2024, 05.10 PM சென்னை, கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பறி போயுள்ளது. இதற்கு யார் பொறுப்பு’ என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி அ.தி.மு.க., சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விழுப்புரம், மரக்காணம்…

Read More

விஷ சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 21, 2024, 05.05 PM சென்னை, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டசபையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது; “தமிழ்நாடு அரசுக்கு ஆக்கபூர்வமான கருத்துகளை தெரிவித்த உறுப்பினர்களுக்கு நன்றி, நிச்சயமாக அரசு கருத்தில் கொள்ளும். எதிர்க்கட்சித் தலைவரும் அவைக்குள் இருந்து தனது கருத்துகளை தெரிவித்திருக்கலாம். அரசியல் காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு…

Read More

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 52- ஆக உயர்வு

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 21, 2024, 05.00 PM கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் 17 பேர் வரையில் உயிரிழந்தனர். நள்ளிரவில் இறப்பின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து அதிகாலையில் உயிரிழப்பு 29-ஆக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து மேலும்…

Read More

தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் தஞ்சம் அடைய போகிறோம்: ஏகனாபுரம் கிராம மக்கள் அறிவிப்பு

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 16, 2024, 07.00 AM காஞ்சீபுரம், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டிவரும் நிலையில் தமிழ்நாட்டை விட்டு வெளியேற போவதாக ஏகானபுரம் கிராம மக்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டிவரும் நிலையில் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி, ஆந்திர மாநில அரசிடம் அகதிகளாக தஞ்சம் அடைய சித்தூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க…

Read More

இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக உபேந்திரா திவேதி நியமனம்

பதிவு: புதன்கிழமை, ஜூன் 12, 2024, 09.00 AM புதுடில்லி, நாட்டின் 30-வது ராணுவ தளபதியாக உபேந்திரா திவேதி பொறுப்பு ஏற்கவுள்ளார். நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே கடந்த 2022-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது பதவி காலம் கடந்த மே.31-ம் தேதி நிறைவடைந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி அவரது பதவிகாலம் மேலும் ஒரு மாதம் என ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து மனோஜ் பாண்டே பதவி காலம் வரும் 30-ம் தேதியுடன்…

Read More