‘என் சாவுக்கு தந்தையும், சகோதரர்களும் காரணம்’ – கடிதம் எழுதிவிட்டு இளம்பெண் தற்கொலை

பள்ளிக்கரணை, பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024, 07.20 AM ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவர் இழப்பை தாங்க முடியாமல் மனைவி தற்கொலை செய்து கொண்டார். சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன் (வயது 25). மெக்கானிக். அவருடைய மனைவி ஷர்மிளா (22). பி.பி.ஏ.பட்டதாரி ஆவார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தார்கள். காதலுக்கு ஷர்மிளாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில்,…

Read More

சொத்து மறுபகிர்வு.. மோடியின் சர்ச்சை கருத்து: உண்மையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்வது என்ன?

புதுடெல்லி, பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024, 07.05 AM விகிதாச்சார உரிமைகள் என்ற தத்துவார்த்த கருத்தை ராகுல் காந்தி குறிப்பிட்டதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தொடர்பாக பிரதமர் மோடியின் விமர்சனம், சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பெரும் விவாதப்பொருளாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது “இதற்கு முன்பு, அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, நாட்டின்…

Read More

நாட்டின் பணக்கார வேட்பாளர்: தெலுங்குதேசம் கட்சி வேட்பாளருக்கு ரூ.5,785 கோடி சொத்துகள்

அமராவதி, பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024, 06.50 AM ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் ரூ.5,785 கோடி சொத்துகளுடன் நாட்டின் பணக்கார வேட்பாளராக உள்ளார். நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கியது. ஜூன் 1-ந் தேதியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில், 4-ந் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது வழங்கும் பிரமாண பத்திரத்தின் மூலம் அவர்கள் சொத்து விவரங்கள் வெளியாகின்றன….

Read More

மோடி போல எந்த பிரதமரும் மூர்க்கத்தனமான தகவல்களை கூறியதில்லை – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை, பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23, 2024, 02.00 AM பிரதமர் தனக்கு முன்னாள் இருந்தவர்கள் மீது கொஞ்சம் மரியாதை வைத்திருக்கவேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத்தள பதிவில், “ராஜஸ்தானில் நேற்று (நேற்று முன்தினம்) பிரதமர் மோடி பேசியது போல் வேறு எந்த பிரதமரும் இவ்வளவு மூர்க்கத்தனமான தகவல்களை கூறியதாக என்னால்…

Read More

முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு ஆதரவான முடிவு… பிரதமர் மோடி பேச்சு

அலிகார், பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23, 2024, 02.00 AM பா.ஜ.க. தலைமையிலான அரசின் மிக முக்கிய முடிவால், ஹஜ் ஒதுக்கீடு அதிகரித்ததுடன் மட்டுமின்றி, விசா விதிகளும் எளிமையாக்கப்பட்டு உள்ளன என பிரதமர் மோடி பேசியுள்ளார். உத்தர பிரதேசத்தின் கவுதமபுத்த நகர், மீரட், பாக்பத், காசியாபாத், அலிகார், மதுரா மற்றும் புலந்த்சாகர் ஆகிய தொகுதிகளுக்கான 2-வது கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில்,…

Read More

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் – ராமதாஸ் கோரிக்கை

சென்னை, பதிவு: திங்கட்கிழமை, ஏப்ரல் 22, 2024, 08.00 AM வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களை தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:- தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில்…

Read More

திகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்

புதுடெல்லி, பதிவு: திங்கட்கிழமை, ஏப்ரல் 22, 2024, 07.45 AM அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக்கோரி திகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க கோர்ட்டு அனுமதி அளித்தும் திகார் சிறை நிர்வாகம் அதை வழங்கவில்லை என்றும், இதன் மூலம் கெஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதாகவும் ஆம்…

Read More

சென்னையில் ஓட்டுப்போடாத 21 லட்சம் வாக்காளர்கள் – ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை, பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2024, 06.15 AM சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளில் 21 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போடவில்லை என மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எந்திரங்கள் அந்தந்த பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், சென்னை லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு…

Read More

பரபரக்கும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி: பா.ஜனதாவில் இணைந்த காங்கிரஸ் தலைவர்

வயநாடு, பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2024, 06.10 AM பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, தான் பா.ஜனதாவில் இணைந்ததாக சுதாகரன் தெரிவித்தார். கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் ராகுல்காந்தி 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவர் சமீபத்தில் வயநாட்டுக்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்து விட்டு சென்றார். இதற்கிடையே வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த சுதாகரன் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மாவட்ட பா.ஜனதா தலைவர் பிரசாந்த் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார்….

Read More

மதுபான கொள்கை முறைகேடு குற்றவாளியிடம் ரூ.60 கோடி பெற்ற பா.ஜனதா – ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2024, 05.55 AM புதுடெல்லி, ரூ.60 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் சரத் ரெட்டி பா.ஜனதாவுக்கு கொடுத்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் உள்பட கட்சியினர் பலரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் ஆம் ஆத்மி கட்சி,…

Read More